Friday, July 17, 2009

பாரி நிலையம் செல்லப்பனார்

பாரி நிலையம் செல்லப்பனார்....
பாரியெநுந் தமிழ் நிலையம் பதிப்பிற் கண்டான்
பாரி செல்லப்பா வென்று அழைக்கப்பெற்றோன்.
'யாரிவர்தாம்' எனக்கேட்கும் அமைதிச் சான்றோன்
யாவரினும் நாணயத்திற் புகழ்மை கொண்டான்
ஒரிஎனக் காரிஎன உலகு போற்ற
ஒரு நூறு புலவோர்க்கு வருவாய் செய்தோன்
மாரிஇவன் எனச் சொன்னால் உவமை போதா
மற்றொன்று சொல்லுதற்கோ புலமை போதா

No comments:

Post a Comment