உ.வா.ச.
பார்காத்தார் ஆயிரம் பேர்;பசித்தார்க்காகப்
பயிர் காத்தார் ஆயிரம் பேர் பாலர்க்காக
மார் காத்தார் ஆயிரம் பேர் வாழ்ந்த நாட்டில்
மனங்காத்த தமிழ்த்தாய் 'என் உடமை எல்லாம்
யார் காத்தார்' எனக்கேட்க ஒருவன் அம்மா
'யான் காப்பேன்' என எழுந்தான் சாமிநாதன்
நீர் காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான்
நிலை காத்த மலைஇமய நெற்றி மேலான்
Friday, July 17, 2009
பாரி நிலையம் செல்லப்பனார்
பாரி நிலையம் செல்லப்பனார்....
பாரியெநுந் தமிழ் நிலையம் பதிப்பிற் கண்டான்
பாரி செல்லப்பா வென்று அழைக்கப்பெற்றோன்.
'யாரிவர்தாம்' எனக்கேட்கும் அமைதிச் சான்றோன்
யாவரினும் நாணயத்திற் புகழ்மை கொண்டான்
ஒரிஎனக் காரிஎன உலகு போற்ற
ஒரு நூறு புலவோர்க்கு வருவாய் செய்தோன்
மாரிஇவன் எனச் சொன்னால் உவமை போதா
மற்றொன்று சொல்லுதற்கோ புலமை போதா
பாரியெநுந் தமிழ் நிலையம் பதிப்பிற் கண்டான்
பாரி செல்லப்பா வென்று அழைக்கப்பெற்றோன்.
'யாரிவர்தாம்' எனக்கேட்கும் அமைதிச் சான்றோன்
யாவரினும் நாணயத்திற் புகழ்மை கொண்டான்
ஒரிஎனக் காரிஎன உலகு போற்ற
ஒரு நூறு புலவோர்க்கு வருவாய் செய்தோன்
மாரிஇவன் எனச் சொன்னால் உவமை போதா
மற்றொன்று சொல்லுதற்கோ புலமை போதா
ச.மெய்யப்பனார் வாழ்த்து....
பதிப்புச் செம்மல் ச.மெயயப்பனர் ......
பதிபபாளும் செம்மலான் ,பல்கலை தேர் வல்லாளன்
பல்லோர் நண்பன்
மதிப்பாளும் நிறுவனத்தான் வளர் தமிழின் கறையனையான்
மடிமை இல்லான்
குதித்தாளும் பெருமான்தன் குனித்தவடி மனத்தகத்தான்
குறிக்கோள் மிக்கான்
உதித்தாளும் ஞாயிறுபோல் ஒளிசிறந்து மெய்யப்பன்
உயர்ந்து வாழி.
பதிபபாளும் செம்மலான் ,பல்கலை தேர் வல்லாளன்
பல்லோர் நண்பன்
மதிப்பாளும் நிறுவனத்தான் வளர் தமிழின் கறையனையான்
மடிமை இல்லான்
குதித்தாளும் பெருமான்தன் குனித்தவடி மனத்தகத்தான்
குறிக்கோள் மிக்கான்
உதித்தாளும் ஞாயிறுபோல் ஒளிசிறந்து மெய்யப்பன்
உயர்ந்து வாழி.
அழகப்பர் மணிவிழா
அழகப்பர் மணி விழா வாழ்த்து....
பாரியைக் காரியைப் பாடல்சால் மாரியை
ஓரியை வென்ற உயரழகன் - தேரின்
எனை வகை ஈகைகள் இந்தியா எங்கும்
நினை வகை செய்தான் நிலத்து.
பாரியைக் காரியைப் பாடல்சால் மாரியை
ஓரியை வென்ற உயரழகன் - தேரின்
எனை வகை ஈகைகள் இந்தியா எங்கும்
நினை வகை செய்தான் நிலத்து.
கி.ஆ.பெ.முத்து விழா வாழ்த்து
கி.ஆ.பெ.விசுவநாதம் முத்து விழா வாழ்த்து....
இந்திப் பகைஞன் எழுபத்தைந் தாண்டினன்
முந்தி இனம் காக்கும் முத்தமிழன்- பிந்தி
வரு தமிழர் நெஞ்சில் வரலாறு தீட்டும்
திரு விசுவநாதன் சிறப்பு
இந்திப் பகைஞன் எழுபத்தைந் தாண்டினன்
முந்தி இனம் காக்கும் முத்தமிழன்- பிந்தி
வரு தமிழர் நெஞ்சில் வரலாறு தீட்டும்
திரு விசுவநாதன் சிறப்பு
Monday, July 13, 2009
எங்கள் தாயின் பெற்றோர்க்கு
6."எங்கள் தாயின் பெற்றோர்க்கு"
என்னை உடனைவர் ஏங்காதே வாழ்வளித்த
அன்னை முதல்வர் அடிபணிந்தோம் ; - பொன்னை
உறவினர் வாழ உவந்தளித்தார்; ஆயுள்
நிறைவினர் நின்ற நெறி.
என்னை உடனைவர் ஏங்காதே வாழ்வளித்த
அன்னை முதல்வர் அடிபணிந்தோம் ; - பொன்னை
உறவினர் வாழ உவந்தளித்தார்; ஆயுள்
நிறைவினர் நின்ற நெறி.
Subscribe to:
Posts (Atom)